clixsense

Friday, 6 July 2018

JOTHIDAM ORU PARVAI

...அண்ணாமலையார் துணை ...


ஜோதிடத்தை அறியும் போதே அது உன் உண்மையா இல்லை பொய்யா என்று சந்தேக கண்ணோடு தான் அறிகின்றோம்.

ஜோதிடம் என்பது அறிவியல் சார்ந்ததா அல்லது ஆன்மிகம் சார்ந்ததா என்ற ஒரு சந்தேகமும் உண்டு.

ஜோதிடம் பரம்பரை சார்ந்தவர்களுக்கே பலிதம் உண்டாகும் என்பது ஒரு சாரர் கருத்து. கடவுள் அருள் உள்ளவர்களுக்கே பலிதம் உண்டாகும் என்பது ஒரு சாரர்  கருத்து.

ஆகவே எப்படி பார்த்தாலும் ஜோதிடத்தின் அறிமுகமே ஒரு சந்தேக கண்ணோடுதான் ஆரம்பம் ஆகின்றது.

ஜோதிடம் அறிவியல் சார்ந்தது என்றால் உலக மக்கள் அனைவரும் தங்களின் எதிர் காலத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஆன்மிகம் சார்ந்த விஷயம் என்றால் முக்கால்வாசி மக்களுக்கு ஒரு துளிகூட நல்லதே நடக்காது.(ஏனென்றால் முக்கால்வாசி நபர்கள் பெயருக்குத்தான் ஆன்மிகத்தை சார்ந்து இருக்கிறார்கள் )
எனவே ஜோதிடம் ஆன்மிகம் மற்றும் அறிவியலின் கலப்பே ஆகும் என்று நான் நம்புகின்றேன். அவரவர் கண்ணோட்டத்தில் எப்படியும் எடுத்து கொள்ளலாம்.

அதே போல பரம்பரை சார்ந்தவர்களாக இருந்தாலும் கடவுள் அருள் இருந்தால் மட்டுமே வாக்கு பலிதம் உண்டாகும் என்பது என் கருத்தாகும்.(ஏனென்றால் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கூட கடவுளால் படைக்கப்பட்டவர்களே கடவுள் இல்லை என்று அவர்கள் சொல்வதும் கடவுளின் சித்தமே)

எப்படி ஆயினும் ஜோதிடம் மக்களின் மனதில் ஒரு ஒளியே .












1 comment:

JOTHIDAM ORU PARVAI

...அண்ணாமலையார் துணை ... ஜோதிடத்தை அறியும் போதே அது உன் உண்மையா இல்லை பொய்யா என்று சந்தேக கண்ணோடு தான் அறிகின்றோம். ஜோதிடம் என்ப...